Wednesday 16 January 2013

தமிழ்வழிக்கல்வி...


போட்டிக்கவிதை- 3

தமிழ்வழிக்கல்வி
************************

கருவினில் தொடங்கிய தமிழ்வழிக்கல்வி...
தெருவினில் கிடப்பதில் மனதினில் பெரும்வலி!

தாய் மொழி மூலம் கல்வி பயில்வதை...
இழிவாக்குவோர் ஈனம் மடியும் வரை !
ஆங்கிலம் பேசுவோர் அறிவாளி...எனும்
எண்ணக்கரு நெஞ்சில் மாறும் வரை !

என் பிள்ளை தமிழறியான்... எனும்...
பெருமைகொள் பெற்றோர் மாறும் வரை !
தனியார் பள்ளியும் ஆங்கிலக் கல்வியும்...
சிறப்பெனும் மோகம் அழியும் வரை !

கற்கும் அனைத்தும் உள்வாங்கிக் கொள்ள...
தாய்மொழி அவசியம் புரியும் வரை !
அரசினர்பள்ளியில் ஆசிரியப்பெருமக்கள்...
கடமையுணர்வுடன் நடக்கும் வரை !

பைந்தமிழ் இலக்கிய இன்பச்சுவையதன்...
பெருமைதனை நாம் உணரும் வரை !
அழகிய மொழியின் தொன்மைச்சிறப்பினை...
முழுப் பற்றோடு நாம் மதிக்கும் வரை !
நெஞ்சம் மிக நொந்து சொல்லுகின்றேன்...
தமிழ்வழிக்கல்வி வெறும் கனவு என்று !

தமிழ்வழி கற்றோர்க்கு முன்னுரிமை தந்தால்...
சுயநலம் கருதித் தமிழ் கற்க வருவர்...
பொதுநலம் மறந்த நம் நாட்டின் கண்கள் !
அன்னை தாய்மொழியின் விழுமியங்கள்..
அழியுமுன்னே... இனி ஒரு விதி செய்வோம்...
இழிவின்றித் தமிழ் கற்போம் !

---கீர்த்தனா---

No comments:

Post a Comment