Sunday 27 January 2013

மீண்டு வா குடிமகனே...

பேசும் வேதங்களோ
புதிது புதிதாய்...
குடியின் போதையில்
தினம் தினம் பல முகம்!
உள்ளே உறங்கும்...
உருவம் இல்லாப் பிசாசை...
உலுப்பி எழுப்ப
உற்சாக பானம்!

உழைப்பின் வெகுமதியை
உருப்படாமல் செலவு செய்து,
உளம் நொந்த துணையின்
உருக்குலைந்த நிலை கண்டும்...
உட்காயம்பட்ட நெஞ்சை...
தினமும் கிளறிக் கீறி...
புதிதாகப் புதிதாக ரணப்படுதுவதில்
என்ன திருப்தி கண்டாய் ???

மன்னித்து விடலாம்...
வந்து கரம் பிடித்தவள் மனைவி - ஆனாலுன்
விந்தில் உயிர்த்த உன்னுயிர்கள்...
மிரண்டு, வலிமிகக் கொண்டு
துடித்து நிற்கையிலே - உன்
நெஞ்சம் வலி கொள்ளவில்லையா?
மன்னிக்க முடியவில்லை
ஒரு போதுமே.....
மீண்டு வா குடிமகனே...
மனவுறுதி கொண்டால்
மீண்டு வரும் வழிகள் உண்டு!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment