Friday 25 January 2013

இனியோராய் இனியெனினும்...


இனியோராய் இனியெனினும்...
*****************************************

போதி மர நிழலில்...
ஒளிர்ந்தான் ஞானப்புத்தன்,
மூப்பு, பிணி, சாக்காடு
ஒருமுறை பார்த்ததினால்!
நிரந்தரமில்லா வாழ்க்கையதன்
நிதர்சனம் புரிந்ததுமே...
நிர்வாணமாக்கினான் மனதினை
சஞ்சலங்கள் தொலைத்து!

நிதம் நிதம் கண்முன்னே...
மூப்பு, பிணி, சாக்காடு
கண்டும் மனம் திருந்தவில்லை!
அடுத்தவர் மனம் வருத்தி...
ஆசைகள் பல பெருக்கி...
அழுக்காறு, அவா, வெகுளி,
இன்னாச்சொல், தவிர்க்கச் சொன்ன..
ஐயன் குறள் மறந்து,
அழுக்கான மனங்களுடன்
மானுடர் நாம் இப்பொழுதும்
நிரந்தரமற்ற வாழ்வுக்காய்...

---கீர்த்தனா---

மனம் அல்லாத நிலையை புத்தர் நிர்வாணம் என்றார், எனில் எண்ணங்கள் இல்லாதது இந்த நிர்வாணம். (படித்தது)
அழுக்காறு = பொறாமை, அவா = ஆசை, வெகுளி = சினம், இன்னாச்சொல் = கடுஞ்சொல் .

No comments:

Post a Comment