Wednesday 16 January 2013

செங்கதிரோன் கருணைக்கு செய்நன்றி கூறி....

கீழ்வானம் சிவந்திருக்க,
செங்கிரணச் செவ்வொளியில்,
மெதுவாக இருள் பிரிய,
மென்பனியும் விலகிச்செல்ல...

செந்நீர் வியர்வை சிந்தும்,
செம்மை உழைப்பின் செம்மல்களை,
செழிக்கும்படி வாழ்த்தியிங்கு,
செஞ்சூளைக் கல்லடுப்பில்,
செஞ்சிவப்புப் பானை வைத்து,
செந்தளிர் மாவிலையைப்
பானையின் கழுத்திற் கட்டி...

செங்கரும்புக் கட்டுடனே,
செவ்வாழை
சேர்ந்முக்கனியும்,
ஒன்றாகச் சேர்த்து வைத்து,
செந்தேன் நெய்யமுதை,
செங்கதிரோன் கருணைக்கு,
செய்நன்றி கூறியிங்கு,
சிறப்பாகப் படையல் வைத்து...
செழுமைமிகு தைமகளை,
எழுச்சியுடன் வரவேற்போம்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment