Wednesday 30 January 2013

தாயுமானவர்


வேகம் கொண்ட உழைப்பு
தேகம் நொந்தும் சிரிப்பு!
வாஞ்சை கொண்ட நெஞ்சம்
பாசம் கொண்டு கொஞ்சும்!

உயிர் கொடுத்த எந்தை - உச்சி
முகர்தலில் அள்ளித் தந்த
பாசத்தின் வலிமை!
கற்றுத் தந்த பாடங்களின்
அறிவுசார் புலமை!

விட்டுச் சென்றும் - கலங்கிய
விழி நீருக்குள்...
கழிந்த சொர்க்கங்கள்
அழியாக் காட்சிகளாய்...

தாயுமானவர்க் கடவுள்
கண்டதில்லை நேரினிலே...
கண்டேன் உணர்ந்தேன்..
நெகிழ்ந்தேன் என் தந்தையிடம்...

---கீர்த்தனா---

:'((

No comments:

Post a Comment