Sunday 6 January 2013

காதலின் விந்தைகள்..

கண்களில் நிறைத்து...
காதலில் திளைத்து...
உன் பெயர் சொல்லி
இனிமைகள் சுகித்து!

நிலவினில் உலவிடும்
உணர்வினில் சிலிர்த்து!
கனவினில் மகிழ்வதும்
நினைவினில் நெகிழ்வதும்!
நிதம் ஒரு கற்பனைக்
கோட்டையில் மிதப்பதும்!

தன்னிச்சையாகவே
புன்னகை விரிப்பதும்!
விரித்த புன்னகை
கூம்பி வாடிட...
வெறித்த விழிகளுடன் - உன்
வரவுக்காய் உறைவதும்...
சுகங்களும் வலிகளும்...
காதலின் விந்தைகளாய்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment