Wednesday 23 January 2013

இதழடைத்து நானும்....

இலக்கணம் படிக்கவில்லை!
இலக்கியத்தில் மேதையுமில்லை!
இயற்கையின் விதிகளை,
இலங்கிடும் அழகினை,
இனிமையாய்ச் சுவைத்தேன்,
இயல்பாகக் கரங்கள்...
இழைத்த வரிகளை,
இயைவுடன் இரசித்து,
இனிய கவிதை என்றீர்...
இன்னன்பு உள்ளங்கள் நீவிர்...
இதழடைத்து நானும் நன்றியுடன்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment