Wednesday 2 January 2013

முள் மஞ்சம்

நட்சத்திரப் பூக்கள்,
கொட்டிக் கிடக்கும்
பஞ்சுமேகப் பட்டுமஞ்சமும்...
முள்ளாய் உறுத்துகிறதோ
நிலாப்பெண்ணே?

தேய்கிறாய் தேய்கிறாய்..
உருவழிந்து போகும் வரை...
முழு நிலா உனை,
மூன்றாம் பிறைக்கீறலாக்கியது,
யாரடி நிலாப்பெண்ணே?


காதலின் காவியக் கரைதலில்
உருக்குலைந்து போகும்...
ஓராயிரம் உள்ளங்களின் வலிதனை
காதலித்து உணர்ந்து கொண்டாயோ?

மீண்டும் வளர்பிறை முழுநிலவாய்...
பிரிந்தவன் வரவால் உயிர்ப்பாய்,
நிலாப்பெண்ணே... !

முள் மஞ்சம் பஞ்சாக...
உடல் புதைப்பாய் இதமாக...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment