Tuesday 22 January 2013

சேற்றினில் செந்தாமரை...

செந்தாமரை நான்
சேற்றினில் தான்
மலர்ந்தேன்!
வானம் நோக்கித் தான்
நான் வளர்வேன்!

வண்ணச் சிரிப்பை - என்
எண்ணச் சிறப்பை...
வறுமையின் பிடிக்குள்...
நான் தர மாட்டேன்!

காற்றினை அருந்திடினும்,
சேற்றினில் புரண்டிடினும் - உண்ணச்
சோற்றுக்கு அலைந்திடினும்,
ஏற்றம் கொண்டு நானேழுவேன் - புது
மாற்றம் வரும் நானுயர்வேன்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment