Sunday 20 January 2013

தூரங்கள் தொலைவாகலாம்...


Bilde: தூரங்கள் தொலைவாகலாம்...
*****************************
பிறக்கவில்லை என் வயிற்றில்
இருந்தாலும் பெரிதுவந்தேன்
இலட்சியங்கள்  வென்ற போது,
ஈன்ற மகள் வென்றது போல்!
உவந்த மனம் வாட்டம் காண
உளம் வருத்திச் சென்றாயோ!

காரணமின்றி காரணி ஆகுபவள்
நீ அல்ல என் மகளே!
காரணம் எதுவோ காரியமில்லை...
காத்திருக்கும் அன்னை மனம்
நொந்திருக்க..காண்பவள்
நீ அல்ல என் மகளே..வந்து விடு ! 

எங்கோ பல்லாயிரம் மைல்கள்...
தூரங்கள் தொலைவாகலாம்...
பாரங்கள் தீர்த்திட பூவையே,
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
பூத்த விழிகளுடன் - பாசம்
தேக்கி வைத்து  கண்ணோரம்
கசியும்  ஈரத்துடன்!

---கீர்த்தனா---
பிறக்கவில்லை என் வயிற்றில்
இருந்தாலும் பெரிதுவந்தேன்
இலட்சியங்கள் வென்ற போது,
ஈன்ற மகள் வென்றது போல்!
உவந்த மனம் வாட்டம் காண
உளம் வருத்திச் சென்றாயோ!

காரணமின்றி காரணி ஆகுபவள்
நீ அல்ல என் மகளே!
காரணம் எதுவோ காரியமில்லை...
காத்திருக்கும் அன்னை மனம்
நொந்திருக்க..காண்பவள்
நீ அல்ல என் மகளே..வந்து விடு !

எங்கோ பல்லாயிரம் மைல்கள்...
தூரங்கள் தொலைவாகலாம்...
பாரங்கள் தீர்த்திட பூவையே,
உன் வரவிற்காய் காத்திருப்பேன்
பூத்த விழிகளுடன் - பாசம்
தேக்கி வைத்து கண்ணோரம்
கசியும் ஈரத்துடன்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment