Thursday 6 March 2014

மௌன அம்புகள்...

சின்ன சின்ன
சந்தோசப் பூக்களையெல்லாம்
உன்னிடமே பிரசவிக்கிறேன்!
ஏனெனில் எனக்காகவெனினும்
இணைந்து சிரிப்பாயென!

துரத்தும் துன்பங்கள்
உன்னிடம் களைகிறேன்!
எனக்காய் கொஞ்சம்
தோள்களில் தாங்கிக் கொண்டு
பஞ்சுப் பொதிகளை
என்னுள் நிரப்புவாயென!

சடுதியில் சில பொழுதில்
மௌன அம்புகள்...
தோழமை நெஞ்சினில்
கூர்மையாய் பாய்ச்சினால்
சுருண்டு தான் போகிறேன்
சுத்தமாய் உயிரிழந்து...


 ---கீர்த்தனா---

No comments:

Post a Comment