Thursday 6 March 2014

ஒலி நாதம்!

மனசஞ்சலம் கழுவித்
துடைக்கும்
மழையின் ராகம்!
காதைக் காதலுடன்
நனைக்கும்
சலசல ஒலி நாதம்!

இறுகப் போர்த்திய
போர்வைக்குள்,
துளிகள் தழுவும்,
உணர்வுடன் இமைமூடி...
மழையொலி ரசித்தபடி....

---கீர்த்தனா---

No comments:

Post a Comment