Thursday 6 March 2014

பேதம் பார்ப்பதில்லை!!!!

வாய்க்கால் வரப்போரம்
பாயும் தண்ணீர்
பேதம் பார்ப்பதில்லை!!!!
நெல்லொடு புல்லுக்கும்
வளருதற்கு உதவுதல் போல்
நான் பருக.. நீ பருக...
ஒரே ஆறு, ஒரே குளம், ஒரே தண்ணீர்...

வீசும் இனிய தென்றல்
பேதம் பார்க்கவில்லை!!!
உயர்வென்ன தாழ்வென்ன...
உன்னைத் தழுவி, என்னைத் தழுவி
பின் பலரைத் தழுவி....

உனக்குள் புகுந்து, எனக்குள் புகுந்து,
பின் பலருக்குள் புகுந்து
ஒரே காற்று, ஒரே மூச்சு...
தீண்டாமை எங்கே...
சாதி மதம் எங்கே... - அதை
நீ காற்றிடம் காட்டு
நின்று விடும் உன் பேச்சு!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment