Thursday 6 March 2014

ஓசை


எங்கிருந்தோ பாடும்
ஒற்றைப் பூங்குயிலின்
சோகம் இழைந்த பாடல்
சன்னமாக என் காதினில்...

அடர் காடுகளையும்
ஊடறுத்து நீண்டு செல்லும்
நதிமகளின் ஒற்றைப் பயணத்தின்
சலசல ஓசை
சன்னமாக என் காதினில்...

ஆழ் மனதினில்
கரைபுரண்டோடும்
அன்பின் அலையோசை
மென்மையாக என் காதினில்...

எலும்புகள், நரம்புகளை
வலிந்து ஆட்கொள்ளும்
வலியின் காதல் தனை தாங்கா
பட்டாம்பூச்சி உயிரின்
படபடப்பு சிறகடிப்பொலி
வன்மையாக என் காதினில்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment