Friday 7 March 2014

பெண்ணே!!!!

அக்கனிக் குண்டங்களின்
அடி வயிற்றுக்குள்
வெந்து போய்விட
பிறப்பு எடுக்கவில்லை..
பெண்ணே!!!!

செவ்வொளிச் சூரியனின்
செங்கதிர்களை நோக்கிய
குளிர்ச்சிப் பயணம் இது!!

தீயவை தண்மையின்
தீர்த்தலாய் ஆத்திரமின்றி
தீர்த்திடுவாய்!!

அட்சய பாத்திரம் தாங்கி
அன்பினை அள்ளி
வழங்கிடுவாய்!!!

மன சாஸ்திரம் அறிந்து வாழ்ந்திட
குண ஸ்தீரி இவளென போற்றிட
மாண்பு மிகு பெண்மையே புறப்படு!!
வெண் மனப் பொன்மகள் நீ என்று காட்டிடு !!!

--கீர்த்தனா (கீதா ரவி)---


எனை ஈன்ற அன்னைக்கும், சிற்றன்னைமாருக்கும், சகோதரிகளுக்கும்,  அன்புள்ளம்  கொண்ட அனைத்து அன்புத்  தோழிகளுக்கும் ... அன்புத் தோழர்களின் துணைவிகளுக்கும்..அனைவரது அன்னையருக்கும்...உறவினர்ப் பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்...  <3 :)

4 comments:

  1. அருமையான வரிகள் மூலம் சிறப்பித்து விட்டீர்கள்... பாராட்டுக்கள்...

    சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

    ReplyDelete
    Replies
    1. மிக மிக நன்றி தோழர்... :)

      Delete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

    வலைச்சர தள இணைப்பு : பாரதியார் வியந்த பெண்மணியும்...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி தோழர். உங்கள் போல ஒருவர் ஊக்கப்படுத்த இருந்தால் போதும். உங்கள் நட்பு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

      Delete