Thursday 6 March 2014

நெஞ்சோரம் கொஞ்சம் ஈரம்...

பெற்றவர்கள் இரத்தச்சாறை
பருகி வளர்ந்ததன் நினைவை
பத்திரமாய் சுமக்கும்
பண்பானவர்கள் இருக்கும் வரை
அகல வாய் திறந்த
முதியோர் இல்ல வாசல்களுக்கு
இரை கிடைக்கப் போவதில்லை!!!

---கீர்த்தனா---

(நல்ல மனம் படைத்தோர் அநாதரவான பெற்றோர்களுக்கு தஞ்சம் கொடுக்கிறார்கள் அவர்களுக்கான பதிவல்ல இது.. பெற்றவர்களை காக்கும் கடமை மறந்த பிள்ளைகளுக்கானது. என்ன வாழ்நிலை ஆதாரம் கிடைத்தாலும், அங்கே பிள்ளைப் பாசத்துக்கான இதயம் நிரம்பிய ஏக்கத்துடிப்பின் வலி
அனைத்துப் பெரியவர்களின் கண்களில் நிரந்தரமாய்
உறைந்திருக்கின்றது... நாளை நமக்கும் அதேநிலை??? )

No comments:

Post a Comment