Thursday 6 March 2014

நகர்வின் விளைவுகள்...


சதுரங்க விளையாட்டின்
விதிகள் எதுவும்
என்றுமே புரிந்ததில்லை!
கற்றுக் கொள்வதற்கு
முயன்றதும் இல்லை!

விரல்களால் நகர்த்தப்படும்
காய்களாய்,
நகர்த்தப்பட்டுக் கொண்டே
படைத்தவன் எண்ணப்படியே...

கற்றுக்கொள்ளாத குற்றமோ?
நகர்த்திச் செல்லும் அவன் தீர்ப்போ?
நகர்வின் விளைவுகள்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment