Tuesday 11 March 2014

ஆதவனும் வரம் தந்தான்!

கருங் குச்சிக் கிளைகளுக்கு
இளங் குருத்து உடை வழங்க...
மனங் கொண்ட ஆதவனும்
மாதங்கள் பல கடந்து வந்து
மெதுவாக இருள் பிரித்து
மஞ்சள் வெயில் வரம் தந்தான்!

சன்னலோர ஏக்கங்கள் விடுத்து
கன்னம் தாங்கிய கரம் பிரித்து
வண்ணங்கள் அணியப் போகும்
வசந்த காலத்தை கட்டியணைக்க...
விழி கொள்ளா ஆசை நிரப்பி
இயற்கையன்னை மகவு இவள்
இன்றே கிளம்புகிறாள்!  :)

<3 ---கீர்த்தனா--- <3

2 comments:

  1. ஆகா... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி சகோதரா...

      Delete