Saturday 29 December 2012

செங்குருதியும் சுவைத்ததோடா...

கருவறைக் கோவிலில்
பூத்த புனிதமலர் ஒன்று...
புழுதியில் கசக்கி வீசி இன்று!

சின்னாபின்னமாக்கி...
இதழ்களைப் பிழிந்த சாற்றின்
செங்குருதியும் சுவைத்ததோடா...
இராட்சதக் காம வண்டுகளே!

கால்களில் உழக்கி நசுக்கிக்
கொன்று தொலைத்திட
நெஞ்சம் துடித்திட
கண்கள் செந்நீர் வடிக்கிறது!

மலரே நீ விதையாய் உறங்கு!
பூவே உன் புதைகுழி மடியில்
கயவரை ஒழிக்க - உனது
ஓராயிரம் கோடி அன்புச்சகோதரர்கள்
போர்க்கொடி தூக்கியாயிற்று!


அழகுமலரே பலகோடி இதயங்களின்
சிந்திய கண்ணீர்ப் பூக்களை - உனக்கு
அஞ்சலியாகச் செலுத்துகின்றேன்..
ஆன்மா சாந்தி அடையட்டும்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment