Tuesday 11 December 2012

மானிடக்காவலன்!

எட்டைய புரத்தில்...
கிட்டிய முத்தவன்!
கட்டியங் கூறியே

எட்டி உதைத்தான்...
புது ஜகம் படைக்க
சமூகத் தளைகளை!!!

பெண்ணுக்கும் ஒரு மனம்
உண்டெனக் கண்டு...
பொங்கி எழுந்த எம்
தோழன் அவன்!
கண்களில் ஈரமும்
நெஞ்சினில் வீரமும்
பெண்மைக்கு தந்திட்ட
வள்ளல் அவன்!

பாட்டினில் ஆடிய...
ரௌத்திரத் தாண்டவம்
நெஞ்சினில் இன்னும்
பெரு நெருப்பாய்...!

அக்கினிக் குஞ்சொன்று
கண்டான்...!
அக்கினிக் கவிஞனாய்
நின்றான்...!
அநீதிகள் எரித்தான்...
மானிடம் காக்க..
தீர்க்கம் நிறைந்த அனல்
தீப் பார்வையினாலே..!

நெஞ்சினுள் வாழ்ந்திடும்
அமர கவியாய்...என்றென்றும்
எம் ரௌத்திரக் காதலன்!
அருள் நிறை அன்புக் கவிஞன்!
மனம் நிறை மானிடக்காவலன்!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment