Friday 7 December 2012

குளிரும் நானும்...

விடிந்தும் விடியவில்லை
குளிரின் தீண்டலிலே...!

போர்வைக்குள் சிறைவாசம்
மிகவும் பிடிக்கிறதே...!
பசி உணர்வும் மறந்து...
தலையணைக்குள் முகம் புதைத்து
தூங்கும் சுகம்...இதம் இதம்..!
இறைவன் தந்த இனிய வரம்!

வெள்ளைப் பூமழை பொழிய...
சாளரம் ஊடறத்துக் காட்சிகள் விரிய...
மெல்லிருளின் சிறு அணைப்பில்..
சுடுபானக் கோப்பை தனை...
இதழ்களிலே பொருத்திக் கொண்டேன்!

சில்லிட்ட மயிர்க்கால்கள்
குத்திட்டு எழுந்து நிற்க...
குளிரின் தழுவல் தனை
காதல் செய்தேன் இதமாக...
கதகதப்புப் போர்வைக்குள்
முழுதாகப் புதைந்து கொண்டே!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment