Monday 17 December 2012

அன்பை யாசகமாய் !


நெஞ்சம் நிரப்பிய நேசப்பூக்கள் !
வஞ்சம் இல்லாக் கொஞ்சும் அன்பு !
துஞ்சாமற் காதல் கொண்டு !
வாஞ்சையுடன் வழங்கிய நாட்கள் !

பஞ்சமும் வந்ததோ - பாச
நெஞ்சுக்குள்ளே இன்று !
கெஞ்சும் விழி ஓடைக்குள்...
மிஞ்சாமல் பெருகும் நீருடன்!
தஞ்சம் கேட்கும் உன்னிடம்...
விஞ்சும் அன்பை யாசகமாய் !
எஞ்சிய காயங்களின் ரணங்கள்...
மிஞ்சின ஊமைக் கேவலுடன்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment