Saturday 1 December 2012

நேசத்தின் அளவீடு

கம்பீரமானவளே !
எங்கே தான் தொலைந்தாய்?
உன்னைக் காணாமல்
மூழ்கடிக்கும் காரணிகள் தான் என்ன?
நேசத்தின் ஆற்றுக்குள்
மூழ்கித் தான் தொலைந்தனையோ?
எழுகிறாய் வீழ்கிறாய்
அடிக்கடி ஏன் தடுமாற்றம்?

ஒருநாளில் மகிழுதல்...
பலநாளில் துவளுதல்...
நிலையில்லாமல்...
நிறம் மாறும் மனம்...
மாயத்தின் தளையோ..,
பாசத்தின் முடிச்சுக்கள்?

வலிகளின் கொள்ளளவும்
அன்பின் கொள்ளளவும்
அளவிடும் கருவி ஒன்று
இக்கணத்தில் இங்கு வேண்டும்
வேசமில்லா என் நெஞ்சுதனை
அளவிட்டுக் காட்டிவிட

மாயப் பிறப்பறுக்கும்...
அந்நாளில் தோன்றும்
நிம்மதியில் ஓர் உறக்கம்...
அந்நாள் வரை யாவருமே
இரையாகித் தான் ஆகவேண்டும்
போராட்டத்தின் பசியடக்க...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment