Monday 24 December 2012

இரட்டைக் கலாச்சாரம்...

இரட்டைக் கலாச்சாரம்...
இடர் படும் பெற்றோர்...
புலம் பெயர் வாசத்தில்
சுவாசம் முட்டி..!

பண்பாடு கலையாத
நம் எண்ணங்கள்,
புண்பாடு காணுமோ
எனத் தினம் எண்ணி...!

அந்நியக் கலாச்சாரம்
ஒட்டவில்லை நெஞ்சில்...
பெற்றவர் மனம் வருந்தி,
பிள்ளைகள் மனம் வருத்தி!

இரு வேறு சமூகத்தில்
ஊன்ற முடியாமல்...
குழந்தைகளின் போராட்டம்!
பண்பாட்டு விழுமியங்களை
ஆழமாய் நேசிக்கும்...
பெற்றவர்கள் போராட்டம்!
தினந்தோறும் முடிவில்லா
நிம்மதியற்ற விடியல்கள்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment