Wednesday 26 December 2012

இறை பாலனே...

ஒளிவீச்சாய்த் தொழுவத்தில்,
மிதந்தாய் பொன்னழகே...
வைக்கோற் போரினிலே...
பேரழகு மின்ன மின்ன...!

கண்களின் ஒளியினிலே
கோடி விண்மீன்கள்...
ஜொலித்தன உலகின்
இருளினை விரட்டிட...!

புன்னகைத்த பூவுதட்டில்...
புதைத்தாய் புண்ணிய பாலனே,
பாவம் பெருக்கிய மானிடர்,
பாவச் சுமைகளை...!

அன்புச் செல்வா! அதிரூப நாயகா!
அன்னை மரியாய் மடி பூத்த மலரே!
நள்ளிரவு காத்திருந்தேன் கண்மலர்த்தி,..
இறை பாலனே உன் வரவை நோக்கி...
இப்போதும் உன்னைச் சுமக்க வைக்க தான்
இவ்வையகம் முழுவதும் பெருகி வழியும்
பாவச்சுமைகளை....!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment