Tuesday 18 December 2012

தனித்தவம்!

புலரும் பொழுதினில்
புலரா மனத்துடன் !
புதிர்களின் முடிச்சுடன்...
புன்னகைக்க மறந்து !

புதுவழிப் பாதையின்
புரிதல் அறியாமல் !
புதுப் புது அர்த்தங்களின்
புழுங்கலில் மனம் அவிந்து !
புதிய சொர்க்க வாசல் தேடி
புரையேறிய காயங்களுடன் !
புத்தொளியை உற்று நோக்கி
பளிங்குப் பாறையில் தனித்தவம்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment