Monday 3 December 2012

அழகியல் விதிகள்...















பூப்பூவாய் வெண்பனிப்பொழிவு!
பார்க்குமிடமெலாம் நீக்கமற நிறைந்து...
மென்துகள் குவியல் பூமகள் மடியில்!

புதைந்து, புரண்டு எழுந்திடும் ஆசை
கரைந்து மறையும் நொடிப்பொழுதினிலே...
கடும் குளிரின் மிரட்சியினாலே!

மேக மூட்டம் விலக்கி அங்கே...
துகள் மேற் சூரியக்கதிர் தழுவும் நேரம்...
இலட்சம் கோடி வைரப் பொடிகள்...
மின்னும் கண்களை நிறைத்த படியே!

கொட்டிய அழகினைக் கண்களால் விழுங்கி...
கோர்த்தேன் அழகிய ஆரம் தனையே!
ஆண்டவன் படைப்பின் அழகியல் விதிகள்...
மனதினை நிறைக்கும் இலவசச் சுகங்கள்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment