Wednesday 26 December 2012

கரை உடைத்த கடுங்கோபம்!

கரையோரக் கண்மணிகள்...
கடவுளாய்த் தான் நினைந்து,
கண்ணோரம் கனவு நிறைத்து,
கடலன்னை மடி தவழ்ந்தார்!

கரை உடைத்த கடுங்கோபம்!
காவு கொண்ட கடுங்கோரம்!
கதறிய உறவுகளின்...நெஞ்சம்
கனத்த வலியின் ஓலம்!
காட்சிப்பதிவாய்க் கண்முன்னே...
கனவிலும் நினைவிலும் -
ஜீரணிக்க முடியாமல்...
கண்களை நனைத்தபடி...
கலங்கிய நெஞ்சத்துள் இன்னும்...!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment