Tuesday 24 July 2012

புதிய ஆத்திசூடி நான்…!

புதிய ஆத்திசூடி நான்…!
---------------------------------------------
விதைக்கப் பட்ட
மண்ணைப் பற்றியே….
வீரியமாய் நான் எழுவேன்…!
வீணர்கள் வெள்ளத்தில்
அடிபட்டுச் செல்லமாட்டேன்…!

கர்வம் கொள்வேன்…அநீதிக்கு
அடிபணிய மாட்டேனென…!
விண்ணைத் தொடமுயல்வேன்…
புத்துணர்வாய் எழுச்சியுடன்…!
பெருமை கொள்வேன்…ஏனெனில்
பாரதியின் புதிய ஆத்திசூடி நான்…!

----கீர்த்தனா----

2 comments:

  1. மிக அருமையான வரிகள் நன்றி

    ReplyDelete