Tuesday 3 July 2012

கண்களின் பனித்துளி...


கண்களில்
இறங்கும்
பனித்துளியே…
எனையேன்
சொட்டச் சொட்ட
நனைக்கின்றாய்…

குளிர்விக்க
முடியவில்லை…
துன்பத்தின்
வெப்பத்தை
உன்னாலென்பது
தான் உண்மை…

உன் தழுவலிலும்…
கருகித்தான்
போகின்றேன்
துளிர்க்க முடியாமலே…

தோல்வியின்
துவளலில் தான்
பனித்துளி
வெப்பத்துளியாய்
ஆனதோ…

---கீர்த்தனா---

No comments:

Post a Comment