Thursday 19 July 2012

வஞ்சக வலையில்…வீழாமல்…















எண்ணங்களின்
வண்ணங்களில்…
சிறகடித்துப் பறக்கும்
மனப்பறவைகளின்
சாம்ராஜ்ஜியத்தை…
ஆலோலம் பாடியே
கலைக்க வரும்
வல்லூறுக்கூட்டங்கள்
வஞ்சக வலையில்…
வீழாமல்… நாமிங்கு
எழுவோம் எழுவோம்
விண்ணைத் தொடுவோம்…!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment