Saturday 7 July 2012

யார் மீது என் கோபம்..?














யார் மீது என் கோபம்..?
சாதிகள் பேசும்
சமுதாயம் மீது…
ஏழையை சுரண்டும்
பணக்காரன் மீது…

குழந்தைத் தொழிலாளி
வைத்திருக்கும்
முதலாளி மீது…
நம்பிக்கைத் துரோகம்
செய்யும் நண்பர்கள் மீது…
அன்பை உணர மறுக்கும்
மனிதர்கள் மீது….

அனாதைகளை…
ஆதரவற்றோரை…
ஊனமுற்றோரை…
பசித்தவனை…
படைத்த

கடவுள் மீது…

கோபம் கோபம்…
கோபம் மட்டுமே
செந்தீயாய் உள்ளே
தகிக்கிறது…
மாற்றங்களின்
விடியலுக்காய்…
மனம் ஏங்கித்
தவிக்கிறது…

கோபம் கொண்ட
பாரதிகள் கை
கோர்த்தென்னுடன்
வாருங்கள்…
துன்பம் தீண்டா…
புதுவுலகம்
ஒன்றாயிணைந்து
படைத்திடுவோம்…



----கீர்த்தனா----

No comments:

Post a Comment