Thursday 12 July 2012

வாழ்வோம் இனியோராய்…

இரவும் பகலும்
இயற்கையின் நியதி…!
இன்பமும் துன்பமும்                                                        
வாழ்க்கையின் நியதி…!

இழுப்பதும் அலைப்பதும்
விதி விளையாட்டு…!
இகழ்தலும் புகழ்தலும்
மனிதனின் இயல்பு…!
இறப்பும் பிறப்பும்
ஆண்டவன் கட்டளை…!

இத்தனை அறிந்தும்
ஏன் போராட்டம்?
ஏன் மனக்கலக்கம்?
வாழும் வரையில்…
வாழ்வோம்
இனியோராய்…
கலக்கம் அனைத்தும்
தூர விலக்கி…!

---கீர்த்தனா---
Vis flere

No comments:

Post a Comment