Sunday 15 July 2012

ஏக்கம் மட்டுமே எச்சமாய்...!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
எழுதாத கோலங்கள் பற்றி
எழுதி விட கோல் எடுத்தேன்…!
எதுவுமே தோன்றவில்லை
எல்லாமே வெற்றிடமாய்…!

எண்ணங்களின் சிறகொடிந்து…
எழுத வேண்டும் எனும் தாகத்தின்
ஏக்கம் மட்டுமே எச்சமாய்...!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment