Monday 9 July 2012

ஒற்றை வார்த்தை போதும்…

 
 
 
 
 
 
 
 
 
 
 

உறக்கம் தொலைத்து
தலையணை நனைத்த
இரவின் பிடியில்…

உன் பிரிவின்
ஒவ்வொரு நிமிடத்துளியும்…
நெளியும் சர்ப்பங்களாய்
மாறி மனதினுள் ஊர்ந்து
ஒன்றிணைந்து…
பின்னிப்பிணைந்து
மனமதை முறுக்கியே…

புரியாத தவிப்புகளும்
வலிகளுமாய்…
கொத்திக் கொன்றன..
என்னுயிரே…உன்னுயிரின்
மூச்சுத் திணறல் நிறுத்த
உன் ஒற்றை..
வார்த்தை போதும்…

----கீர்த்தனா----

No comments:

Post a Comment