Sunday 15 July 2012

அதிசய வனப்பு…!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
குளிர் வண்ணங்களின்
ஒன்றிணைவாய்…
அழகு மயிலதன்
வண்ணக்குழைவு…!

படைத்தவனின் குதூகல
வெளிப்பாட்டினில்
எழுந்த...சிருஷ்டிப்பின்
உச்சக்கட்டப் படைப்பு…! 

ஆடல் திறனும்…அழகும்…
ஒன்றாய் இணைந்த
அற்புதப் பறவை…!
வேலவனையும் மயக்கிய
அதிசய வனப்பு…!

தோகைச் சிலிர்த்தலிலும்…
கொண்டை அசைத்தலிலும்…
உள்ளம் பறிக்கும்
அழகோவியம்…!
விழிகளின் தாகம் தீர்க்கும்…
திகட்டாப் பேரழகு…!

----கீர்த்தனா----

No comments:

Post a Comment