Tuesday 10 July 2012

மனமெங்கும் பூக்கள்...















இளவேனிற்காலம்
இனிதான மாற்றம்…
மனமெங்கும் பூக்கள்
நிறைவாகப் பூக்கும்…

மரந்தோறும் கிளையில்
சுகந்தேடும் பறவைகள்
அழகாகப் பாடி இனிதாய்
மனம் நிறைக்க…

வண்ண வண்ணப் பூக்களும்
வண்ணத்துப்பூச்சிகளும்
ஓன்றாய்க் குலவிச் சிரிக்க…

அழகாய் அசைந்த
இனிய தென்றற்காற்று…
கூந்தல் கற்றை
அசைத்து…
இதமாய்த் தழுவி
வருடிச்செல்ல....

நெஞ்சுக்கூட்டுக்குள்
ஊற்றெடுக்கும்…
சொல்லொணா...
இனிய இனிய
உணர்வுகள்…

-----கீர்த்தனா-----

2 comments:

  1. உணர்வுகளுக்கு பஞ்சமில்லை இனிய இரவு கவிதை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது தம்பி! :)

      Delete