Saturday 21 July 2012

அன்பினூற்றில்.....

விலகிவிடு உரைக்கிறது
நெஞ்சம்….!
முடியாது மறுக்கிறது
இதயம்….!

கல் மேல் எழுத்தாய்…
உன் நினைவுகள்
என்னை ஆக்கிரமிக்க…
நீர் மேல் எழுத்தாய்…
என் நினைவுகள்
உன்னை விட்டுக்கரைவதை
உணர்கின்றேன்…வலியுடன்…!

ஆனாலும்…உன் நெஞ்சோரம்
உறுதியான என் அன்புக்கு
நிச்சயம் இடம் உண்டென
சிறு துளிர்ப்பாய் ஓர் நம்பிக்கை…!

நான் காணாமல் போகும்
தருணம் அவ்விடத்தில்
இருந்து எழும்….
அன்பினூற்றில் சுரக்கும்…
உன் விழியோரம் எனக்காய்
இரு சொட்டு உப்புக்கரிக்கும்
நீர்த்துளிகள்…!

----கீர்த்தனா----

1 comment:

  1. அருமையான வரிகள். வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete