Tuesday 24 July 2012

உண்மைகள் உறங்காது...

அடுத்தவர் உள்ளம்...
கலைப்பதில் ஒரு சுகம்...!
அடுத்தவர் பற்றி...
புரளி பேசுவது ஒரு சுகம்...!
புரிந்து கொள்ள முடியா...
விலங்கு மனிதர்கள்...!

உண்மையை விழுங்கி...
நேர்மையை மிதித்து...
புத்தியை கோணல்வழி நடத்தி...
கண்ட பலன் தான் என்ன...!

தன்னை தானே
திருத்துங்கள்...முதலில்...
அடுத்தவர் வீட்டினை
எட்டி பாருங்கள்...அதன்பின்...
உண்மைகள் உறங்காது...
ஒரு நாள் கழுத்து
மேல் கத்தியாய்
உங்களுக்கே திரும்பும்...!

பொய் சொல்வதும்
புறம் சொல்வதும் தவிர்த்து...
மனிதராய் மனிதம் வாழ
இன்றே உங்களை
திருத்திக் கொள்ளுங்கள்...!

----கீர்த்தனா----


1 comment:

  1. அருமை . நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

    ReplyDelete