Thursday 26 September 2013

திருக்குறளே தேசிய நூல்

வாழ்வியற் தத்துவங்கள்
அத்தனையும் மொத்தமாய்!
இருவரிகள் வடிவினில்
இரத்தினச் சுருக்கமாய்!
தந்தனன் ஐயனும்
குறள் வடிவினிலே!
நற்றவம் செய்தோம் நாம்
திரு வரிகள் உணர்ந்திடவே!

முப்பாலும் கலந்து தந்து
எப்பாலோரும் உணர வைத்து
அறனுடன் சேர்த்து
அனைத்தும் வலியுறுத்தும்...
ஆண்டகை வாக்குகள்
நாட்டினை ஆளும்!!
உயிர்களைக் கவரும்
உலகினை வெல்லும்!!

தெள்ளு தமிழினிலே
அள்ளிக் கொடுத்த வரி...
அறிஞர் மனம் கவர்ந்து,
திரை கடலும் கடந்து,
உலமெலாம் பரந்து...
உயரிய சிறப்பதனால்
மேன்மைதனைப் பெற்ற
அருந்தவ நூல் தனை
தேசிய நூல் ஆக்கிடவே
யோசித்தல் தகுமா???
யாசித்தல் முறையா???

அன்புடைமை பெருக்கி
பண்புடைமை வளர்க்கும்!
வாழ்வியலின் வேதம்
வானோங்க ஒலிக்கும்!
வள்ளுவப் பெருந்தகை வாக்கு
வாழ்வை நேராக்கும் நோக்கு!
திருக்குறளே தேசிய நூல்!
வேறு இல்லை அதற்கு நேர்!!
ஓங்கி உரைத்திடு நீ
தங்கத் தமிழ் ஊன்றும் வேர்!!

---கீர்த்தனா---

2 comments:

  1. மிகவும் ரசித்துப் படித்தேன்... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
    Replies
    1. Mika mika nandri sakotharaa.. pinthiya replykku mannikkavum...

      Delete