Thursday 26 September 2013

திலீப தீபம்

வயிற்றில் வளர்த்த வேள்வித்தீயில்
உயிர் கரைந்த நிமிடங்களை
யுகங்களாய் எண்ணியபடி
காத்து விட மாட்டார்களா என்று
அன்று நாம் கதறித் துடித்த நாட்கள்...

உடலை விட்டு மூச்சு பிரிந்த கணம்
ஒருமித்த மக்கள் வெள்ளத்தின்
ஓவென்ற கதறல் ஒலியின்
வலியின் பிழிதல்
பச்சை ரணமாய் இன்னும் வலித்தபடி...

மனிதம் உள்ளவரை...
அகிம்சை என்ற சொற்பதம்
இவ்வையகத்தில் வாழும்வரை...
இனியவனே நீ என்றும் சிரஞ்சீவி!
என்றோ ஒரு நாள்
உன் கனவு மெய்ப்படும்!
உன் மனதின் பசி அடங்கும்!
அதுவரை நிம்மதியாய் உறங்கு!


No comments:

Post a Comment