Thursday 26 September 2013

தனி மனித மாற்றம்

ஓயாத அலைகளாய்
நெஞ்சத்தின் கதறல்கள்!
சமூக மாற்றம் அது
தனி மனித மாற்றம்
என்பதை அறிந்தும்!
இலகுவான போதனைகள்
பிறருக்கு மட்டுமாய்...

நெஞ்சத்துப் பேரலையை
சிறிது தணிப்போராய்...
சொல்வதை செய்யும்
பாரதியின் தாசர் சிலர்!
பெய்யும் வான்மழை
அவர்க்காய்...
இன்னும் மனிதம்
கொஞ்சம் வாழ்வதால்...

---கீர்த்தனா---

No comments:

Post a Comment