Thursday 26 September 2013

வீணைகளின் புழுதி தட்டி...


நம்பினோர் கெடுவதில்லை
நான்கு மறை தீர்ப்பு - இன்று
நம்பினோர் எழுவதில்லை
வீழ்வதுவே தீர்ப்பு!

தர்மங்களும் நியாயங்களும்
பாழுங்கிணற்றின் வயிற்றுக்குள்
முழுமாதக் கர்ப்பிணியாய்
பெருத்து உப்பிய படி...

விதி விலக்காய் சிலர் தவிர்த்து
வீதி தோறும் மனிதம் செத்தோர்!!
நல்ல மனம் தேடித் தேடி
நாடெல்லாம் ஓடி ஓடி!!!

எழுச்சி கொள்ளத் தெரியாத
வீழ்ச்சி கொண்ட மனிதர்களாய்
பாரதியும் இன்றிருந்தால்
வீணைகளின் புழுதி தட்டி...
நல்லதோர் வீணையாக
ஒவ்வொன்றாய் மாற்றி இன்று
நல்லுலகம் படைத்திருப்பான்!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment