
அறியாப் புதிரே!!
உணர்வுக் கடலாய்
எனையேன் படைத்தாய்?
இனிமை தந்தனை
இயற்கை வடிவினில்!
வலிகள் தந்தனை
அன்பின் வடிவினில்!
சுகிக்க நினைத்தால்
சுடுகின்ற வலிகள்..
இயற்கையின் அழகினை
எரித்துக் கொன்றன!!
மாறாத பேரன்பு
வெல்லும் என்று...
மனதோடு மழைக்காலம்
குளிர்விக்கும் என்று...
பச்சையம் நிறைந்த
பசுமை மனதுக்காய்...
உன் கழல் தொழுதேன்
அரவணைத்து அருள்வாய்!!
---கீர்த்தனா---
No comments:
Post a Comment