Thursday 26 September 2013

நெஞ்சத்து ஆசைகள்!












அந்திவானத்து வெட்கச் சிவப்பு!
அழகுப் பூக்களின் வண்ண அணிவகுப்பு!
ஆசையாய் கொஞ்சும் பட்சிகள் காதல்!
ஆனந்த கானத்தின் உயிர்ப்புத் தழுவல்!

ஆண்டவன் சன்னதி மங்கள வாத்தியம்!
ஆரண்யம் நடுவே மூங்கில் குடில்!
ஆடிக் களிக்கும் தோகை மயில்கள்!
துள்ளித் திரியும் மருள்விழி மான்கள்!

நுரைத்துச் சுழித்தோடும் அழகு நீரோடை!
ஓங்கி உயர்ந்து பொங்கும் கடலலை!
அழியா அன்பின் அழகிய இராகம்!
இந்தக் கணத்தின் நெஞ்சத்து ஆசைகள்!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment