Saturday 30 March 2013

மகிழ்விப்பின் சுவை

உள்ளுக்குள் உணர்வுகள் அழலாம்
உடைந்த மனத்தை கண்ணாடியாய்
உன் முகம் காட்டலாம்...
உன்னுள்ளே புதைத்துக் கொள்,
உணர்வின் காயங்கள் அத்தனையும்...

உனக்கான உன்னைச் சுற்றியிருக்கும்
உன்னத உறவுகள் அனைவரையும்
உடைப்பெடுக்கும் உனதன்பினில் நீந்த வை..
உருவாகும் போது என்ன கொண்டுவந்தோம்?
உருவிழந்து போகும் போது கொண்டு செல்ல..
உயிருள்ளவரை யாரையும் காயம் படுத்தாதே...
உளமாரப் பிழை பொறுத்து...
உண்மை அன்பின் இலக்கணமாய்...
ஊர் போற்றும் உத்தமராய் நாமெல்லாம்...

---கீர்த்தனா---

அன்பின்,





மகிழ்விப்பின் சுவையே நிலையானது...

7 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. இணைப்பு மாறி விட்டது...

    இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் சார், உங்கள் அன்புக்கும் ஊக்குவிப்புக்கும் மனமார்ந்த நன்றிகள். உடனடியாக பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்..நான் வெளியூர் சென்றதனால் இங்கே வரமுடியவில்லை. நிச்சயமாகப் பார்க்கிறேன். நன்றி வணக்கம்.. அன்புடன் கீர்த்தனா. :)

      Delete
  3. உயிருள்ளவரை யாரையும் காயம் படுத்தாதே வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கவியாழி சார்..அன்புடன் கீர்த்தனா.

      Delete
  4. திண்டுக்கல் தனபாலன் சார், உங்கள் அன்புக்கும் ஊக்குவிப்புக்கும் மனமார்ந்த நன்றிகள். உடனடியாக பதிலளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்..நான் வெளியூர் சென்றதனால் இங்கே வரமுடியவில்லை. நிச்சயமாகப் பார்க்கிறேன். நன்றி வணக்கம்.. அன்புடன் கீர்த்தனா.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete