Friday 8 March 2013

பெண்மையின் வியாபகம்....

மலைகளாய் உயர்ந்து...
கடலாய்ப் பரந்து விரிந்து...
நதிகளாய்ப் பிரவகித்து...
பூமியாய்ப் பாரம் தாங்கி...
பிரபஞ்ச இயக்கத்தில்...எங்கெங்கும்
பெண்மையின் வியாபகம்....

கருவறைத் தாய் நமதன்னை!
கருணைத் தாய் பலரன்னை! ( தெரசா )
கண்ணுள் தாங்கும் சகோதரி!
நெஞ்சினுள் சுமக்கும் தாரம்!
கொஞ்சி விளையாடும் செல்லமகள்!
எங்கேயும்... எங்கேயும்...
பெண்மையின் உண்மை பிணைந்து...
ஆண்மையின் போற்றுதலில்
மேன்மையின் உச்சம் பெற்று....

அனைத்து மேன்மைமிகு மகளிர்கட்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்!!!!

---கீர்த்தனா---

No comments:

Post a Comment