Monday 11 March 2013

உணர்வுள்ள பொம்மைகளாய்...

பொம்மலாட்டம் ஆடுகின்றோம்...
பொழுதெல்லாம் நாமெல்லாம்...
ஒரு நுனியில் எமைப் பிணைத்து
மறு நுனியைத் தான் பற்றி,
நூலின் அசைவில் அவன் ஆட்டிடும்...
தோலின் அழகணி போர்த்திய
பொம்மைகளாய்....உணர்வுள்ள
பொம்மைகளாய் நாமிங்கு...
மாய உலகின் மாய வலையில்
சிக்கியது புரிந்தும் எதையோ தேடி
உளம் மிக வருந்தி....நிம்மதி
இழப்பில்....உழன்றபடி.....

---கீர்த்தனா---

1 comment:

  1. பொம்மலாட்டம் கவிதை சிறப்பாக உள்ளது.

    ReplyDelete