Sunday 23 August 2015

எதுவும் நம் கையில் இல்லை...

நகர்வுகள் எதுவும்
நம் கையில் இல்லை...
அகண்ட பேரண்டத்தில்
பல்லாயிரம் கோடி
அசையும் அணுப்புள்ளிகள்
அதில் நாம் ஒற்றைப்புள்ளி...


ஒற்றைப்புள்ளிக்குள்
பலகோடி பலகோடி
கற்றை உணர்வுகள்
சற்றும் இரக்கமின்றி
புதைத்து வைத்தானே...
அவன் கருணை கொண்டவனா...
இல்லை கடுமை உள்ளவனா...

இல்லையென்று சொல்வதில்லையாம்
கையேந்தினால்....
இல்லையென்றே சொல்கிறான்
என்றுமே...பெரும்பாலும் பலருக்கு ...

---கீர்த்தனா---

2 comments:

  1. உண்மைதான் சகோதரி!
    உணர்வு மூட்டைகளாய் உலாவருகிறோம் நாங்கள்!

    அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி இளையநிலாவின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்

      Delete