Monday 17 August 2015

என் ஏகாந்த நகரம்!

வேதனை வெப்பங்களை
சூரியக்கங்குகள் விழுங்கி
வீரியத்துடன் அமைதி தரும்
அடிவான நகருள் புதைந்து பின்
விடிவானில் எழுந்து வருவேன் நிதம்!

இயற்கைத் தாய் தந்த
என் ஏகாந்த நகரம்!
அத்தனை முறையும்
நேசக்கதிர்கள் நீட்டும்
அடிவான வண்ணக்குழம்பு!
அழகிய மௌனத் தொடர்பாடல்
நீரில் நீந்தி வானில் கலக்கும்
ஆசீர்வதிக்கப்பட்ட
ஆனந்த மணித்துளிகள்!
இயற்கையை ஆளப் பிறந்த
பேரரசி நான்!
---கீர்த்தனா--- Mobile click

Akersvannet, Melsomvik, Norway ( அடிக்கடி சூரிய அஸ்தமனத்தில் போய் அமரும் இயற்கை மடி)

No comments:

Post a Comment